2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சிரார்த்த தினம்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 04:40 - 2     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18ஆவது சிரார்த்த தினம், எதிர்வரும் 30ஆம் திகதி, கொழும்பிலும் மலையகத்திலும் நடைபெறவுள்ளது.

இது குறித்து, இ.தொ.கா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அன்றைய தினம் காலை 7 மணிக்கு, கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அமரரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்தலைத் தொடர்ந்து, 8 மணிக்கு சௌமிய பவனில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜையும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் யாவற்றிலும் இ.தொ.கா பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இ.தொ.கா மாகாண அமைச்சர்கள், உப தலைவர்கள், உதவிச் செயலாளர்கள், இ.தொ.கா உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதையடுத்து, மலையகத்திலும் அமரரின் சிராத்த தினத்தையொட்டி, தோட்ட ஆலயங்களிலும்
இ.தொ.கா பணிமனைகளிலும் விசேட பூஜைகள் இடம்பெறவுள்ளன.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 18ஆவது சிரார்த்த தினத்தையொட்டி, இ.தொ.காவின் உத்தியோகபூர்வ மாத இதழான “காங்கிரஸ்” சிறப்புப் பிரதியை, இ.தொ.கா பொதுச் செயலாளர், தலைவர் ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 2

  • Satho Monday, 23 October 2017 12:03 PM

    A leader badly needed at this moment.

    Reply : 0       0

    Sathi Monday, 23 October 2017 02:44 PM

    Thondaman Aiya a mahathma for not only for certain community but for the whole srilankans

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .