2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அம்பியூலன்ஸ் விபத்து; நோயாளி தப்பினார்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெனியாய வைத்தியசாலைக்கு அருகில், இன்று (17) அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

தெனியாய - இயலகம பிரதேசத்தில் இருந்து தெனியாய வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி, தடுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பாதையை விட்டு விளகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இச்சம்பவத்தின் போது, அம்பியூலன்ஸ் வண்டியில் சென்ற 85 வயதுடைய ஆண் நோயாளி ஒருவர் துரதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதோடு, அதில் சென்ற சாரதியும் தாதியும் பாதிப்பின்றி தப்பியுள்ளனர்.  

இந்த அம்பியூலன்ஸ் வண்டி சிறிதேனும் அசைந்து இருந்தால் இந்நிலை மாறுபட்டிருக்கும் என, தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.  

தெனியாய பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து, விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியை இழுத்து பாதைக்கு கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X