2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல்

J.A. George   / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3, 165 A காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , 165 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 166 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 2, 166 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

167 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 D புதிய காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், பண்டாரகம – அட்டலுகம, மொனராகலை – படல்கும்புற ஆகிய பகுதிகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், பண்டாரகம மற்றும் அட்டலுகம பகுதிகளில் 660 A எப்பிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும், 659 B பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, மொனராகலை – படல்கும்புற பகுதியில் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X