Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் கவனயீனத்தின் பிரதிபலனே கொரோனா வைரஸின் இரண்டாம் அலை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், கொரோனா பரவலில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது
வைரஸைக் கட்டுப்படுத்தி வெற்றிகண்டுவிட்டதாகக் காண்பிப்பதற்கே அரசாங்கம் முயற்சிப்பதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்ட தாமதம் கடும் விசனமளிக்கிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், கொரோனா வைரஸ் பரவலின்
இரண்டாம் அலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தினால் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை சரிவர நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago