2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்தின் அரசியல் கூட்டங்களுக்கு இ.போ.ச பஸ்கள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 15 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் அரசியல் கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் கட்சி ஆதரவாளர்கள் குறித்த கூட்டங்களில் கலந்துக்கொள்ள இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்துவதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுக்கு பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைபாடுகள் தொடர்பில் விசாரணைகளை செய்ய தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பான தகவல்களை இலங்கை போக்குவரத்து சபையிடம் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்காக விசேட குழுவொன்று கடந்த வௌ்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளதாகவும் செயலாளர் ஹே​ரத் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X