2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேருக்கும் மீண்டும் பதவி

Editorial   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16பேருக்கும், மீண்டும் பதவிகளை வழங்க, கட்சி தீர்மானித்துள்ளதாக, சு.கவின் உப செயலாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

நேற்று (24) இரவு இடம்பெற்ற, சு.கவின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்படி 16 பேரும், கட்சியை விட்டு விலகுவது தொடர்பில், ஒரு வார்த்தையேனும் பேசவில்லையென்றும், கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அமைச்சர் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சிக்குள், 23பேர் தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற 16 பேருக்கும், மீண்டும் பதவிகளை வழங்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X