2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அரசாங்கத்துக்கு சொந்தமான கட்டடங்களுக்கு மாற்றுமாறு ஆலோசனை

Editorial   / 2019 டிசெம்பர் 11 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் கட்டடங்களில் நடத்திச் செல்லப்படும் அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களை, அரசுக்கு சொந்தமான கட்டடங்களுக்குக் கொண்டுசெல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள் தனியார் கட்டடங்களில் நடத்தப்பட்டு வருவதால், மேலதிகமாக செலவுகள் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.

தற்போது சில அமைச்சுகள் மற்றும் அமைச்சின் சில பிரிவுகள், சில அரச நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட சில கட்டடங்களின் ஒப்பந்தங்கள் நிறைவுபெறாதமையால் அவை தொடர்ந்தும் அரச நிறுவனங்களாக முன்னெடுக்கப்படும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X