2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை’-சரத் பொன்சேகா

Editorial   / 2017 நவம்பர் 19 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில விடயங்களில் அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லையென சந்தேகம் ஏற்படுவதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(19) நாடாளுமன்றில் 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் 3ஆம் வாசிப்பில் கலந்துக்கொண்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'அரசையும்,ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்கே இராணுவம் உள்ளது. எனினும் கடந்த 2015ஆம் ஆண்;டு ஜனவரி 8ஆம் திகதி அப்போதைய இராணுவத் தளபதியும், பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் இணைந்து ஜனநாயகத்தை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டனர்.இதன்போது முன்னாள் பொலிஸ்மா அதிபரின் தலையீட்டினால் அவர்களின் சூழ்ச்சி நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது' என பீல்ட் மார்சல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

'எனினும் அரசாங்கத்துக்கு இந்த நடவடிக்கை தொடர்பில்  அப்போது தகுந்த பதிலடி வழங்குவதற்கு முதுகெலும்பு இல்லாமல் போய்விட்டதைப் போல் குறித்த நடவடிக்கை தொடர்பில் சட்டத்தை நடைமுறைபடுத்த எமதுஅரசாங்கத்துக்கு இன்றும் முதுகெலும்பு இல்லாமல் இருப்பதாகவும்' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .