2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அரை நிர்வாண புகைப்படம் எடுத்தவர்களை தேடும் பொலிஸார்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரியா- பிதுரங்கலை குன்றிலிருந்து அரை நிர்வாணத்துடன் புகைப்படம் எடுத்து, அதனை சமூகவலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் குறித்து விசாரணைகள் ஆ​ரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

1983 இலக்கம் 22 இன் கீழ் ஆபாச பிரசாரங்களைத் தடுத்தல் திருத்த சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்துக்கு அமைய, குறித்த புகைப்படங்களில் உள்ள நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று சீகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய இரு இளைஞர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .