2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘அலி சப்ரி இருந்தால்தான் கோட்டாபய வீடு செல்வார்’

Kogilavani   / 2020 நவம்பர் 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ விரைவாக வீட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தொடர்ந்து இந்த சபையில் இருக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹேஷா விதானகே தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் உயிரிழந்த நீதி அமைச்சரின் உறவினர் ஒருவரது உடல், அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடலை அடக்கம் செய்வதற்கு, நீதி அமைச்சர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியிருந்ததாக நான் நேற்றும் சபையில் கூறியிருந்தேன். முடிந்தால், இதனை நிரூபிக்கும்படி அவர் சபையில் கூறியிருந்தார் எனத் தெரிவித்த ஹேஷா விதான​கே, இந்த விடயம் தொடர்பில் செய்தி வெளியிட்டிருந்த பத்திரிகை ஒன்றையும் சபையில் சமர்ப்பித்தார்.

“தவறு செய்தால், நீதி அமைச்சர் தனது வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். எங்களது அரசாங்கத்திலும், உங்களைப் போன்ற நீதி அமைச்சர் ஒருவர் இருந்தார். அவராலேயே நாம் வீட்டுக்குச் சென்றிருந்தோம். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவையும் வீட்டுக்கு அனுப்புவதற்கு, நீங்கள் தொடர்ந்து இந்தச் சபையில் இருக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .