2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல தயாரான 12 பேர் சிலாபத்தில் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சட்டவிரோதமான முறையில்  செல்ல தயாரான 12 பேர், சிலாபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இரணவில பகுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை, வெலிகந்த, கல்குடா மற்றும் தொடுவாய் ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்றைய தினம் சிலாபம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .