2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஆசிரியையை அச்சுறுத்திய நபருக்கு எதிராக முறைப்பாடு

Editorial   / 2017 நவம்பர் 16 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாடசாலை ஆசிரியை ஒருவரை அச்சுறுத்திய நபர் ஒருவருக்கு எதிராக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரங்குளி-கிவ்லகெலே  வித்தியாலயத்தில் கடமையாற்றிவரும் வரும் ஆர்.எம்.பீ ரத்நாயக்க என்ற ஆசிரியையே இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

குறித்த பாடசாலையில் தரம் 11 இல் கல்விப் பயின்று வரும் மாணவி ஒருவர், பாடசாலை ஒழுக்க விதிமுறைகளுக்கு அப்பால் கட்டையாக பாடசாலை சீருடையினை அணிந்து வந்ததையடுத்து ஆசிரியர் அம் மாணவிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து மாணவி தொலைபேசியில் தனது தந்தையிடம் ஆசிரியர் இவ்வாறு தனக்கு எச்சரிக்கை விடுத்திருப்பதாக கூறியுள்ளார்.

மறுதினம், மாணவியின் தந்தை பாடசாலை கடமை நேரத்தில், பாடசாலைக்கு வருகைத்தந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்த ஆசிரியையை,  தகாத வார்த்தைகளால் திட்டி, அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆசிரியர் பாடசாலை அதிபர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவித்ததன் பின்னர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் பாடசாலைக்கு வருகைத்தந்து சம்பவம் தொடர்பில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாடசாலை கடமை நேரத்தில் இவ்வாறு அத்துமீறி நுழைந்து ஆசிரியரை அச்சுறுத்திய நபர் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஒருவரின் மருமகன் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடரிபில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X