2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஆதரவான யோசனையில் 70 பேர் கையொப்பம்’

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்குமு் யோசனையொன்றை சபாநாயகர் கருஜயசூரியவிடம், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கையளிக்கவுள்ளனர் என அறியமுடிகின்றது.

இந்த யோசனையில், அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிர​தியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக 70 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அவர்களில், ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிப்போரும் அடங்குகின்றனர் என அறியமுடிகின்றது.

இது இவ்வாறிருக்க, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கையளிக்கப்பட்டள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 55 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .