2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆறுமுகனின் பூதவுடல் இன்று கொட்டகலைக்கு

Editorial   / 2020 மே 30 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொட்டகலைக்கு இன்று (30) எடுத்துச் செல்லப்படவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் கொழும்பிலிருந்து விசேட ஹெலிக்கொப்டர் ஊடாக கம்பளைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து புசல்லாவை வழியாக, ரம்பொடை வேவண்டன் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பூதவுடல் இன்று காலை வேவண்டனிலிருந்து லபுக்கலை வழியாக நுவரெலியா, நானுஓயா, லிந்துலை, தலவாக்கலை வழியாக கொட்டகலை சீ.எல்.எப் மண்டபத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நாளைய தினம் பிற்பகல் 1.30 க்கு சீ.எல்.எப் வளாகத்திலிருந்து ஹட்டன், டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு அரங்கிற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 4 மணி அளவில் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .