2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆவணங்களை கையளிக்குமாறு அமைச்சர் ரவியின் மகளுக்கு உத்தரவு

Editorial   / 2019 ஜூன் 20 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு​ளோபல் ட்ரான்போடேசன் நிறுவனத்துக்குரிய ஆவணங்களை எதிர்வரும் 25ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறு, அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஒனேலா கருணாநாயக்கவிடம் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயர்தன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஒனேலா கருநாணயக்கவை எதிர்வரும் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலமளிக்குமாறும் நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொய் சாட்சிகளை  வழங்கினாரென, அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகளுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைபாடு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .