2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இணைந்து செயற்படுவோம், ஆனால் இணையமாட்டோம்’

Editorial   / 2018 மே 24 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஒன்றிணைந்த எதிரணிக்கும் இடையிலான முறுகலை குறைத்து சமரசத்தை ஏற்படுத்துவதற்காக குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த 16 பேரும் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் தனித்தே இயங்குவார்கள் எனவும், எனினும் அரசியல் செயற்பாடுகளின் போது ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இது அவர்களுடன் இணைந்துகொண்டதாக அரத்தப்படாது எனவும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .