2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இந்திய மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை

Editorial   / 2018 பெப்ரவரி 23 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்   20 பேரை விடுதலைச் செய்ய, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர் அனுமதி வழங்கியுள்ளார் என, அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், கைது செய்யப்பட்டுள்ள 20 மீனவர்ளும் விடுதலை செய்யப்படவுள்ளனர் என, அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், எல்லைத் தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில், இந்திய மீனவர்கள் 129 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 109 பேர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 20 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .