2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தியா பயணமாகியுள்ள பிரதமர் ரணில்

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

3 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் புதுடில்லி நோக்கி பயணமாகியுள்ளார்.

பிரதமர் தலைமையிலான அந்த தூதுக்குழுவில் 15 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்கள், ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தான யு.எல்-195 என்ற விமானத்தில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 2:15க்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியை டில்லியில் வைத்து சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளையும் பிரதமர் சந்திக்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .