2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்டிகோவின்” விமானசேவைகள் இலங்கையில் ஆரம்பம்

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 21 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை-இந்தியாவுக்கிடையில் புதிய விமான சே​வையொன்று நேற்று (20) காலை ஆரம்பமானது.

குறைந்த செலவில் “இன்டிகோ”  விமான நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த புதிய சேவையானது இந்தியாவின் சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு  நாளொன்றிட்கு 3 தடவைகள் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் நேற்று  (20) காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததுடன், இதனை வரவேற்கும் நிகழ்வுகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய சேவையின் இலங்கைப் பிரதிநிதிகளாக ஹேமாஸ் நிறுவனம் இணைந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X