2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்று வெளிநாடுகளுக்கு பறக்கும் அமைச்சர்கள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 பெப்ரவரி 25 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர்கள் பலர் இன்றைய தினம் வெளிநாடுகளுக்கு பறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இன்று அதிகாலை (25) 3 மணியளவில் Q.R 669 கட்டார் விமானம் மூலம் டோஹா கட்டார் நோக்கி பயணமாகியுள்ளதாகவும், அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இன்று பிற்பகல் 1.55 மணியளவில் இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான UL- 195 விமானம் மூலம் டில்லிக்கும், அமைச்சர் சரத் அமுனுகம 2.35 மணியளவில் UL- 406  விமானம் மூலம் தாய்லாந்து நோக்கி பயணமாகவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், அமைச்சர் ரவீந்திர சமரவீர இன்று பகல் 12.50 மணியளவில் இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான UL- 503 விமானம் மூலம் லண்டன் நோக்கி செல்லவுள்ள நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்படவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .