2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இயற்கை அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

Editorial   / 2018 மே 27 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த, இயற்கை அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் தொடர்பில் இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய  மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையே மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மண்சரிவு அபாயம் உள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X