Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 06 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று ( 06) காலை 08 மணியளவில் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடுகுளத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக குளத்தின் நீர் மட்டம் 31 அடியாக உள்ளது.
இந்த நிலையில் இரண்ட வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடு குளத்தில் 36 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் அதிகளவு நீர் வந்துகொண்டிருப்பதனால் 31 அடி நீர் மட்டத்தில் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
எனவே இரணைமடு குளத்தின் வான் நீர் வெளியேறும் பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago