2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘இராணுவம் குறித்துத் தீர்மானிக்க இந்தியாவசமாவது பாரதூரமானது’

Editorial   / 2018 ஜூலை 16 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கமல் 

 

ஹம்பாந்தோட்டை - மத்தள விமான நிலையம், இந்தியா வசமாவதானது, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக அமையுமெனத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இலங்கை -இந்திய ஒப்பந்தத்தை விடவும் இது பாரதூரமான நிலைமையைத் தோற்றுவிக்குமென்று குறிப்பிட்டார்.  

மத்தள விமான நிலையம், இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகக் குறிப்பிட்டு, விமல் எம்.பியினால் நேற்று (15) விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது,  

இரு பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தியே, கடந்த அரசாங்கத்தால் அந்த விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள விமால் வீரவன்ச, உலகின் மிகப்பெரிய 10 துறைமுகங்களில் ஒன்றான ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு அருகில், விமானச் சேவைகளை ஊக்குவிப்பதும் சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளை தொடர்புபடுத்தக்கூடிய பிரதான விமான தளமாக அமைப்பதுமே இவ்விரு காரணிகளென விளக்கியுள்ளார்.  

தற்போதும், 7 சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகள், மத்தலயில் உருவாகியுள்ளனவெனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், 150 விமானச் சேவைகள், மத்தள விமான நிலையத்தின் வான்பரப்பைக் கடந்துப் பயணிப்பதாகவும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகளின் விமானச் சேவைகள், இவ்வான்பரப்பைக் கடந்துப் பயணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

அத்துடன், மத்தல விமான நிலையம் காரணமாக, ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கும் விமானங்களின் வான்பரப்பு விமானப்பாதைப் குறுகியதாகக் மாற்றமடைகின்றதென, தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விமல் வீரவன்ச, இதனால், மத்தள விமான நிலையத்தின் கேள்வி அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம், அவ்விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, கடுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடுபாதையை விஸ்தரிப்புச் செய்துள்ளமையானது, அநாவசியமான முதலீடெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இவ்வாறான விமான நிலையத்தை, தற்போதைய ஆட்சியாளர்கள், குறைந்த பெறுமதிக்கு இந்தியாவுக்கு விற்பனை செய்வது ஏற்புடையதல்ல எனவும் குறித்த விமான நிலையத்துக்காகப் பெறப்பட்ட கடனை திருப்பிச் செலுத்துவதானது, திறைசேறிக்கு அழுத்தமாகவும் அமையப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

மத்தளை விமான நிலையம் உட்பட சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பை, பாதுபாப்புப் பகுதி என்ற பேரில் இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் திர்மானித்துள்ளதெனவும் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர் மேனன் வெளியிட்டுள்ள புத்தகமொன்றில், இந்தியாவிலிருந்து 14 மைல்கள் தூரத்தில், இந்திய விமானப் படையின் ஹெலிகொப்டர்களை நிறுத்தி வைக்கக்கூடிய போர்க் கப்பலெனெ இலங்கையை வர்ணித்துள்ள நிலையில், திருகோணமலை துறைமுகத்தில் இந்தியா கால்பதிப்பதற்கான வாய்ப்பாகவும் இது அமைந்துவிடுமென, விமல் வீசவன்ச எச்சரித்துள்ளார்.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X