2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு புனரமைப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தில்

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவை புனரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

"60 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் தற்போது திருத்தியமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளன. மற்றைய சத்திர சிகிச்சை கூடத்தின் புனரமைப்புப் பணிகள் விரைவில் பூர்த்தியடைந்து விடும்" என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

"பழைய சிகிச்சைக் கூடங்களில் கிருமிகள் பரவும் ஆபத்து காணப்படுகின்றது. அதனால், இவற்றைப் புதுப்பிக்க தீர்மானிக்கப்பட்டது. இலங்கை இராணுவம் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இருதய நோயாளர்களுக்கான சிகிச்சைகளை விசேட வைத்தியர்கள் நாடு பூராகவும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் அந்த சேவையை பாராட்டியுள்ள சுகாதார அமைச்சர் 24 மணி நேரமும் சுயமாகவே இந்த வைத்தியர்கள் சிகிச்சையில் ஈடுபடுவது ஏனைய வைத்தியர்களுக்கு ஒரு முன்மாதிரியாகும்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .