2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும்: ஹக்கீம்

Editorial   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதா அல்லது பிரதான தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றிய கலந்துரையாடல், கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று (18) ஸ்ரீ லங்கா முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில், நடைபெற்றது.  

இதில், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர்.  

அவர்களது கருத்துகளையும், ஆலோசனைகளையும் செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், “பிரஸ்தாப தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது பற்றிய இறுதித் தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

அமைச்சர் ஹக்கீம் கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாணத்திலும் ஏனைய சில மாவட்டங்களிலும் கொழும்பிலும் கட்சி முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடி வருவதோடு, கட்சியின் மேல்மட்ட முக்கியஸ்தர்களோடு மந்திராலோசனைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .