Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மே 27 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான (ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்) எயார்பஸ் A320 (Airbus A320) என்ற விமானம் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (26) பாகிஸ்தான் லாஹுர் நகரிலிருந்து இலங்கையை வந்தடைந்த குறித்த விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
தரையிறங்கிய விமானம், விமானத்துக்கு தண்ணீர் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டிருந்த பவுசருடன் எதிர்ப்பாராத வகையில் மோதியதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்துக் காரணமாக விமான நிறுவனத்துக்கு 15 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த பவுசரின் சாரதி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago