2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி வரிச் சலுகை

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்க அரசால் வழங்கப்படுகின்ற, ஜி.எஸ்.பி  வரிச் சலுகை இம்மாதம் 22ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட 120 நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் 5,000 வகையான பொருட்களுக்கு, ஜி.எஸ்.பி வரிச் சலுகையை 2020ஆம் ஆண்டு இறுதிவரை நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

இதற்கமைய இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு அதன் நன்மையை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி என்றும் இல்லாதவாறு கடந்த வருடம் மூன்று பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது 2016ஆம் ஆண்டைவிட 3.65 வீத அதிகரிப்பாகும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜி.எஸ்.பி வரிச்சலுகை 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியான நிலையில் மீண்டும் அதற்கான அங்கிகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .