2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலங்கைப் படையினர் தொடர்பில் ஐ.நா எச்சரிக்கை

Editorial   / 2018 ஏப்ரல் 23 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியாற்றுவதற்காக, லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 49 இலங்கைப் படையினர்  தொடர்பிலான ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுமாறு அமைதிகாக்கும் படையின் பேச்சாளர் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஊடாக ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் துரித கதியில் நடிவடிக்கை எடுக்க வேண்டுமென, பேச்சாளர் நிக்கி பர்ன்பெக் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கதம் கரிசனைக்காட்டுமென தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்திற்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின், 49 இலங்கைப் படையினரை, திருப்பி அழைக்குமாறு அரசங்கத்திடம் கோரப்படுமெனவும், அரசாங்கத்தின் செலவிலேயே அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை அனுப்பும் நிலையும் அரசாங்கத்திற்கு ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வுகள் நிறைவடையும் முன்னரே, இராணுவத்தின் 49 பேர் கொண்ட குழுவொன்று கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து, ஏனைய இலங்கைப் படையினரை லெபனானுக்கு அனுப்பப்படுவதை ஐக்கிய நாடுகள்  அமைதிகாக்கும் செயலகம் தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .