2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையை வந்தடைந்த ஈரானிய சபாநாயகர் முக்கிய சந்திப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லறிஜனி (Ali Larijani) தலைமையிலான குழு நேற்று இரவு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இவர்கள் கடந்த 15ஆம் திகதி ஈரானின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து புறப்பட்டு, வியட்நாமுக்கு சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நேற்று   இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கு வருகைதந்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சபாநாயகர் அலி லரிஜனி இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தக் காலப்பகுதியில் பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவையும், சபாநாயகர் கரு ஜயசூரியவையும் அவர் சந்திப்பார்.

இரண்டு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இருதரப்பு நல்லுறவு தொடர்பிலான விடயங்களை மேம்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின்போது பேச்சு நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .