Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 மே 21 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், தெற்கு இலண்டனில், கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அருனேஸ் தங்கராஜா என்ற 28 வயது இளைஞர் ஒருவரே, இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளாரென, இலண்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் நேரப்படி, நேற்று அதிகாலை 3.30 அளவில் தாக்குதலுக்கு இலக்கான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், 44 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உயிரிழந்த அருனேஸுக்கு, இலண்டனில் குடும்பம் எதுவும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காலமானமதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago