2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இளநீர் பறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி பலி

Editorial   / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

 

குருநாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில், நேற்று (19), தென்னை மரத்தில் ஏறி, இளநீர் குலையைப் பறிக்கமுற்பட்ட 19 வயது இளைஞன் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இளைஞன், ஏறாவூர் – மக்காமடி, ஆதம்லெப்பை குறுக்கு வீதியைச் சேர்ந்த தாவூத் சலீம் முஹம்மது றிபான் (வயது 19) என்பவராவார்.

இளநீர் விற்பனைச் செய்யும் இவ்விளைஞன், வழமைபோன்று, குருநாகல் - இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள தென்னந் தோப்புக்களிலுள்ள தென்னை மரங்களில் ஏறி இளநீர்க் குலையைப் பறித்துக் கொண்டிருக்கும்போதே, இவ்வாறு மின்சாரம் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X