2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இவ்வாண்டு இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்?

Kogilavani   / 2017 ஜூன் 28 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்துரங்க பிரதீப்

உள்ளூராட்சித் தேர்தல் சட்டம் சம்பந்தமான தொழில்நுட்பப் பிரச்சினைகள், ஜூலை மாதத்துக்குள் தீர்க்கப்படுமாயின், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, இவ்வாண்டு இறுதிக்கும் நடத்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு நேற்றுத் தெரிவித்தது.

நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன என்றும் தெரிவித்தார்.

"கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் தேர்தல்கள், 2012 டிசெம்பரில் நடத்தப்பட்டன. ஆகவே, அச்சபைகளின் காலம், இவ்வாண்டு செப்டெம்பர், ஒக்டோபரில் நிறைவடையவுள்ளன. அந்தக் காலம் நிறைவடைந்து 7 நாட்களுக்குள், தேர்தல் பற்றிய அறிவிப்பை, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டும்.

ஆகவே, தேர்தல்கள் தொடர்பான அறிவிப்பை, ஒக்டோபர் 2ஆம் திகதி வெளியிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், டிசெம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

"உள்ளூராட்சி, மாகாண சபைத் தேர்தல்களுக்கான தரவுகளைச் சேகரிப்பது சம்பந்தமான சுற்றுநிரூபம், ஜூலை 1ஆம் திகதி வெளியிடப்படும். அரச ஊழியர்கள், அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் ஆகியோர் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கு, இந்தச் சுற்றுநிரூபம் வெளியிடப்படும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .