2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

உக்ரைன் பயணிகளுக்கு இங்கு செல்ல தடை

S. Shivany   / 2021 ஜனவரி 21 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்கு வருகைதந்துள்ள உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, தெஹிவளை உள்ளிட்ட மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் இதற்கான அனுமதியை கோரியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதியின் ஆலோசனை இன்றி எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாதெனவும்  தெரிவித்துள்ளார். 

கொவிட் பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பின்னவல மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் பின்னவல சஃபாரி பூங்கா உள்ளிட்டவை  சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .