2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உடவளவ நீர்த்தேக்க வீதி வழமைக்குத் திரும்பியது

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடவளவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளுக்கு அருகில், பாலத்தில் வெடிப்பு ஏற்பட்டமையினால், மட்டுப்படுத்தப்பட்டிருந்த கனரக வாகனங்களின் போக்குவரத்து, நேற்றைய தினம் (16) மீண்டும் வழமைக்குத் திரும்பியது.

தேவையேற்படின் மீண்டும் கனரக வாகனங்களின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் என, குறித்த பாலத்தின் பொறியியலாளர் சுஜீவ குணசேகர தெரிவித்துள்ளார்.

சில நாட்களாகப் பெய்துவரும் அதிக மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன.

எனினும், அவை மீண்டும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .