2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’உண்டியல் திருடனை போல அரசாங்கம் மாட்டடிக்கொண்டது’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் தான் தேர்தல் மேடையொன்றில் மின்சார கட்டணங்களை குறைப்பதாக கூறியிருந்த நிலையில் உடனடியாக அரசாங்கம் மக்களுக்கு மின்சார கட்டணங்களில் சலுகை வழங்க முன்வந்துள்ளதாகவும், அதனால் ஆட்சிக்கு வரும் முன்பே தான் சாதித்து விட்டதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்தால் அடுத்தகட்ட சேவைகளை

முன்னெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

 

உலக சந்தையில் காணப்படும் எண்ணெய் விலையை மய்யப்படுத்தியே உள்நாட்டில் மின் கட்டணத்தை தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்த அவர், அரசாங்கம் அதனை செய்யாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்றும் சாடினார்.

 கடந்த மாதம் 3 மாத கட்டணங்களை செலுத்தாதவர்களுக்கு மின் துண்டிப்பு இரத்துச் செய்யப்படுமென கூறிய அரசாங்கம் தற்போது மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்போவதாக கூறுவது வேடிக்கையென தெரிவித்த அவர், தான் அது குறித்து பேசியதால் உண்டியலில் திருடப்போன திருடனை போல அரசாங்கம் மாட்டிக்கொண்டது என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .