2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உதவிகளுக்கு நன்றி

Editorial   / 2018 மே 27 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைக்கு உதவிகளை (நிதி உள்ளிட்ட) வழங்கிய சர்வதேச நாடுகள், அமைப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்கியிருந்தன.

இதுத் தொடர்பாக, வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நிதி உதவிகளை வழங்க விரும்புவோருக்காக, தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் வங்கிக் கணக்கு விவரங்களும் தரப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .