2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’உதவிகளை வழங்கத் தயார்’

Amirthapriya   / 2018 மே 20 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழையுடன் கூடிய வானிலை நிலவி வருவதால், அனர்த்தங்கள் ஏற்படக்கூடியப் பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்க இராணுவம் தயாராகவுள்ளது, என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்துள்ளார்.

​மேலும் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகும் பிரதேசங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினூடாக அறிந்து, உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவில் மழைப் பெய்யக்கூடிய சாத்தியநிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .