2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எசல பெரஹராவையொட்டி விசேட ரயில் சேவை

Editorial   / 2018 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தலதா மாளிகையில் இடம்பெறவுள்ள எசல பெரஹராவையொட்டி, விசேட ரயில் சேவையை  முன்னெடுக்க, ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய,நாளை 21 தொடக்கம் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை, புறக்கோட்டையிலிருந்து- கண்டி வரை இவ் விசேட ரயில் ​சேவை இடம்பெறவுள்ளது.

குறித்த நாட்களில் காலை 9.50 மணியளவில் புறக்கோட்டையிலிருந்து கண்டிக்கு ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளதுடன், இந்த ரயில் பிற்பகல் 1.15 அளவில் கண்டியை சென்றடையவுள்ளது.

அத்துடன் கண்டியிலிருந்து, மு.ப 11.45 க்கு கொழும்பு கோட்டை மற்றும் நாவலப்பிட்டி வரை, 2 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் 26 ஆம் திகதி கோட்டையிலிருந்து காலை 7 மணிக்கு கண்டிக்கும், கண்டியிலிருந்து இரவு 7 மணிக்கு கோட்டைக்குமாக, 2 ரயில்கள் சேவையில் ஈடுபடுமென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .