2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’என்னை ​தொடர்ந்து விமர்சியுங்கள்’

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கெதிரான விமர்சனங்களே தனது வளர்ச்சிக்கு காரணமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். .

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,  ''இம்முறை மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் சிந்தித்து தங்களது வாக்குளை செலுத்துவார்கள்.

நான் சில இடங்களுக்குச் செல்லும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்தது என்ற கேள்வி கேட்பார்கள். அதற்கு நான் பதில் வழங்கும்போது எனது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் குறித்து விமர்சிப்பார்கள்.

இவ்வாறு எனக்கெதிரான விமர்சனங்களே எனது வளர்ச்சிக்கு காரணம். எனவே தயவு செய்து என்னை தொடர்ந்தும் விமர்சியுங்கள். இப்படி நீங்கள் என்னை விமர்சித்தால் என்னால் இம்முறை தேர்தலில் வெற்றிபெற முடியும்.” எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .