2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘எமது அரசாங்கம் இருந்திருந்தால் இரண்டு வருடத்துக்கு முன்பே நிறைவடைந்திருக்கும்’

Editorial   / 2019 பெப்ரவரி 17 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்​முடைய அரசாங்கம் இருந்திருந்தால் மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே நிறைவு செய்யப்பட்டிருக்குமென, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று அதிவேகப் பணிகள் மந்த நிலையில் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்களால் பார்க்க முடியாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (16) வெயாங்கொட நகரில் புதிய சந்தையை திறந்து வைத்து உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முடியாமையாது என்று புரிந்துக்கொண்டதாலேயே ஜனாதிபதி தம்முடன் இணைந்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .