2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ரூ. 6 இலட்சம் கொள்ளை

Editorial   / 2018 மே 22 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை, பெலிஅத்த - வலஸ்முல்ல வீதியில் அமைந்துள்ள எரிபொருள நிரப்பு நிலையம் ஒன்றில், ஆறு இலட்சத்து 50,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை பொலிஸின் குற்ற விசாரணைப் பிரிவினரால் பெலிஅத்த பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிட்ட பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட, 25,150, 35,000 ரூபா பெறுமதியான இரண்டு கையடக்கத்தொலைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் 18 மற்றும் 19 வயதுடைய பெலிஅத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .