2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எல்.ரீ.ரீ.ஈ தற்கொலைதாரிக்கு உதவிய பெண்ணுக்கு சிறைத்தண்டனை

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 16 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவிய பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (16) தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், அபராதத் தொகையும் விதித்துள்ளது.

ஈ.பி.டி.பி. கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தாவை  படுகொலை செய்ய முயற்சித்த தற்கொலைத்தாரி ஒருவருக்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவருக்கே இன்று இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

செல்வகுமார் சத்யவேல் என்ற குறித்த சந்கேநபர் சிறையில் இருக்க வேண்டிய காலத்திற்கு அதிகமாக​வே சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும், 15 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாதகால சிறைத்தண்டனையும், 25,000 ரூபாய் அபராதத் தொகையையும் விதித்து மேல்நீதிமன்ற நீதிபதி விக்ரம களுஆராய்ச்சி இன்று தீர்ப்பளித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X