Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபைகள் தேர்தலை, புதிய முறைமையின் கீழ் நடத்துவதற்குத் தேவையான தொகுதிகளைப் பிரிக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, எதிர்வரும் 24ஆம் திகதியன்று, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அவ்வறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் விவாதிக்கப்பட்டதன் பின்னர், அவ்வறிக்கையை நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியுமென தெரிவித்த அவர், அதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எந்த முறைமையில் நடத்துவதென்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என்றார்.
மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றதெனத் தெரிவித்த அவர், அந்தத் தேர்தல், புதிய தொகுதி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ், விரைவில் நடத்தப்படவேண்டும என்பதே தங்களுடைய கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago