2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஏ-9 வீதியின் ஒருபகுதி தாழிறங்கியது

Editorial   / 2018 மே 21 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளதால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகமிக அவதானத்துடன் வானங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில்,  அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

இந்த வீதி, இரண்டு ஒழுங்கைகளை கொண்டிருந்தாலும், வீதி தாழிறங்கிய பகுதியில் மட்டும், ஒரு ஒழுங்கை மட்டுமே பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற மோசமான வானிலை, தொடருமாயின், இந்த வீதியின் சில பகுதிகள் ஆங்காங்கே தாழிறங்கும் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .