2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகின்றது

Editorial   / 2018 நவம்பர் 20 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக, ஐக்கிய ​தேசியக் கட்சி பல போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கண்டி, களுத்துறை, கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் சனிக்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 27, டிசம்பர் மாதம், 4 ஆம் திகதிகளிலும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தற்போதைய அரசியல் நிலமைத் தொடர்பில் மக்களைத் தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமென்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .