2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'ஐ.தே.க. கூட்டணியில் இணையும் எதிர்பார்ப்பு இல்லை'

Editorial   / 2019 ஜூலை 22 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி உருவாக்கப்படவுள்ள கூட்டணியில் இணைந்துகொள்ளும் எதிர்பார்ப்பு இதுவரை தனக்கு இல்லை என,  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று (21) இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில், அநுராதபுரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில், பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X