2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.தே.க பதவிகளில் மாற்றம்; செயற்குழு அனுமதி

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட கட்சியின் உயர் பதவிகளுக்கான புதிய உறுப்பினர்களுக்கு அந்தக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் நிதியமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, ரவி கருணாநாயக்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய சில பதவிகளில் ​நேற்றிரவு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில், கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற அரசியற்குழு கூட்டத்திலேயே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார். தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டார்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க தேசிய அமைப்பாளராகவும், ​பொருளாளராக  இராஜாங்க அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை, துணைத்தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சியின் உதவித் தலைவரான ரவி கருணாநாயக்க ஆகிய இருவரும் அந்தந்த பதவிகளை தொடர்ந்தும் வகிப்பர் அதற்கான அங்கீகாரத்தை அரசியற்குழு வழங்கியிருந்தது.

இந்நிலையில், கட்சியின் உதவி பொதுச் செயலாளராக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .