2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.தே.க வின் விசேட கலந்துரையாடல்

Editorial   / 2018 டிசெம்பர் 13 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடலொன்று இன்று மாலை 6 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் உயரிய நம்பிக்கையுள்ளதென சமர்ப்பிக்கப்பட்ட யோசனையானது நேற்றைய தினம்  117 ​வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமைத் தொடர்பிலும் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்பின் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .