2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.தே.கவை பிளவுபடுத்திவிட்டு 2/3 ஐ பெற முயற்சி

Editorial   / 2020 ஜூலை 11 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்திவிட்டு 2/3 பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் தற்போதைய அரசாங்கம்  ஈடுபட்டுள்ளதென ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் ருவன் விஸேவர்தன தெரிவித்தார்.

 கம்பஹாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

 ஐக்கிய தேசிய கட்சியை இரண்டாக பிரித்துவிட்டு , 2/3 பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றதெனவும்,  கட்சி பிரிந்துவிட்டாலும் கட்சியின் பொருளாதார கொள்கைகளை எவராலும் புறக்கணிக்க முடியாதெனவும் தெரிவித்தார். 

மற்றைய கட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஐக்கிய தேசிய கட்சியின் பெறுமதியை அறிந்துகொள்ள முடியுமென தெரிவித்த அவர், அந்த கட்சியை பாதுகாப்பதற்கான சந்தர்ப்பம் வந்துள்ளதெனவும் தெரிவித்தார். 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .