2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஐக்கிய தேசிய கட்சி நாலக சில்வாவை பாதுகாக்கிறது’

Kamal   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலைச் செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவை ஐக்கிய தேசிய கட்சி பாதுகாக்க முற்படுகின்றதென தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியது.

மேலும், இந்த விவகாரத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் பொலிஸ்மா அதிபரும், இவ்விடயத்தில் சட்டத்தை சரியாக ந​டைமுறைப்படுத்த தவறிய சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பதவி விலக வேண்டும் எனவும் அக்கட்சியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .